Sunday 14 June 2015



எலுமிச்சை


தெற்காசியாவிலும், தென் கிழக்காசியாவிலும், எலுமிச்சை தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இது முதலில் பாரசீகத்துக்கும், அங்கிருந்து ஈராக், பின்னர் கி.பி.700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது குறித்து பதிவுகள் முதன் முதலில் கிபி 10ம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. எலுமிச்சம் பழச்சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச்சுவை தருகிறது. எலுமிச்சை பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இதை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்னையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்னைகளைப் போக்கும். தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகும். இது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். வைட்டமின் `சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரைக்கப்படும். தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும். சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடலாம். உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது. ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் செரிமான பிரச்னை குணமாகி விடும். எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்கள் எளிதில் குணமாகிவிடும். சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எலுமிச்சையில் எண்ணற்ற மருத்துவ குணாதிசயங்கள் உள்ளதால், தினமும் பயன்படுத்துவோம்.

No comments:

Post a Comment